மன்னார் வளைகுடா தீவு சுற்றுலாத்தலமாக்கப்படும்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
மன்னார்வளைகுடா கடலில் உள்ள தீவுகளில் ஒன்றை சுற்றுலாத்தலமாக மாற்றத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகன் தெரிவித்தார்.
தங்கச்சிமடத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
ராமேஸ்வரம் கோவிலை தரிசிக்க வருவோர் இம்மாவட்டத்தை ஒட்டியுள்ள தீவுகளுக்குப் படகில் சென்று வர விரும்புகிறார்கள். இதனால்மன்னார்வளைகுடா கடலில் உள்ள தீவுகளை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மணிபாரதி இக்கூட்டத்தில்பேசும்போது கேட்டுக் கொண்டார்.
மன்னார்வளைகுடா கடலில் மண்டபம் முதல் தூத்துக்குடி வரை 40 தீவுகள் கடல் வாழ் விலங்குகளின் புகலிடமாகத் திகழ்கின்றன. இதனால் இந்தத்தீவுகளில் ஏதாவது ஒன்றை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications