For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகப்பாவை வீரப்பனே விடுவித்திருப்பார் .. ரேடியோ வெங்கடேசன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பன் பிடியில் இருந்து நடிகர் ராஜ்குமாரின் உதவியாளர் நாகப்பா தப்பிஓடிவரவில்லை. நாகப்பா விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று தடா கைதிரேடியோ வெங்கடேசன் நிருபர்களிடம் சொன்னார்.

வீரப்பன் தன்னிடம் ஒப்படைக்கக் கோரிய தமிழ் தீவிரவாதிகளில் ஒருவரான ரேடியோவேங்கடேசன், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை சூறையாடிய வழக்கு, விழுப்புரம்வெடிகுண்டு வழக்கு ஆகியவற்றில் சம்ப்நதப்பட்டவர்.

காவல் நீடிப்புக்காக தடா கைதி ரேடியோ வெங்டேசன் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்டார். இவரது போலீஸ் காவலை அடுத்த மாதம் 24-ம் தேதிவரைநீடித்து சென்னை தடா நீதிமன்ற நீதிபதி சின்ன பாண்டி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வெங்கடேசன் நிருபர்களிடம், வீரப்பனின்கோரிக்கையை ஏற்று நான் உட்பட ஐந்து பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்தநடவடிக்கை மிகவும் சயானது தான்.

பெங்களூரில் வள்ளூவர் சிலை அமைப்பது, காவிரி நீர் பிரச்சனை மற்றும் மைசூரில்உள்ள 121 தடா கைதிகளின் விடுதலை ஆகியவற்றில் கர்நாடக அரசு நடந்து கொண்டவிதம் சரியானதாக தெரியவில்லை.

ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட நாகப்பா, தப்பி வந்தாக நான் கருதவில்லை. அவரைவீரப்பனே விடுதலை செய்து விட்டார். இதனால் எங்களது விடுதலை வலுவிழந்துவிட்டதாக நான் கருதவில்லை. ராஜ்குமார் கடத்தல் மூலமாக தமிழர்களின் பிரச்சனை,இந்திய அளவில் கவனத்தை கவர்ந்துள்ளது.

இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அமெரிக்கா சென்ற வாஜ்பாய் அங்குஆர்.எஸ்.எஸ். என்கிற முத்திரையுடன் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.

மத்திய மாநில அரசுகளால் தான் பொதுமக்கள் போராட்டத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.நியாயத்துக்காக நடைபெறும் போராட்டங்களை போலீஸார் மூலம் ஒடுக்கமுற்பட்டால் பொதுமக்கள் கிளர்ந்து எழுவதை யாராலும் தடுக்க முடியாது என்றுநிருபர்களிடம் கூறினார் வெங்கடேசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X