போதை மருந்து பரிசோதனையில் சிக்கிய 33 அமெரிக்க தடகள வீரர், வீராங்கனைகள்
சிட்னி:
கடந்த ஆண்டில் மட்டும் 33 அமெரிக்க தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் போதை மருந்துச்சோதனையில் பிடிபட்டதாக அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி அறிக்கையில் இத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 923 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் விளையாட்டுப் போட்டிகளின்போது769 முறையும், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே 154 முறையும் பரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டன.

இப் பரிசோதனைகளில் 33 பேர் பிடிபட்டனர். 5 பேர் அனபாலிக் ஸ்டீராய்டும், 26 பேர்ஸ்டிமுலன்ட்டுகளையும், 2 பேர் வேறு போதை மருந்துகளையும் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.மேற்கண்ட போதைமருந்துகள் எல்லாம் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பயன்படுத்ததடை செய்யப்பட்டவையாகும்.
அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியின் இந்த அறிக்கையில், போதை மருந்து பயன்படுத்தி பிடிபட்டவர்களின்பெயர் விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைபற்றிய விவரங்களும் அதில் இல்லை.












Click it and Unblock the Notifications