For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை விமானத்தில் வெடிகுண்டு புரளி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையிலிருந்து மும்பை செல்லும் விமானம் வெடிகுண்டு புரளியால் 4 மணி நேரம்தாமதமாகச் சென்றது.

கோவையிலிருந்து மும்பை வழியாக டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம்இயக்கப்படுகிறது. இந்த விமானம் திங்கள்கிழமை மதியம் 1.55 மணிக்கு கோவை வந்துசேர்ந்தது. மீண்டும் மும்பைக்கு 2.30 மணிக்குப் புறப்படத் தயாரானது.

விமானத்தில் 151 பயணிகள் இருந்தனர். அப்போது ஒருவர் கழிவறைப் பக்கம் சென்றார்.அங்கு ஒரு வெள்ளைத் தாளில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதிஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அவர் விமான ஊழியர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவரசரமாக இறக்கிவிடப்பட்டனர். விமானம் முழுவதிலும் சோதனை நடந்தது.

மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை ஒரு இடம் விடாமல்சோதனையிட்டனர். இருப்பினும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இந்தசோதனையால் சுமார் 4 மணி நேரம் விமானம் புறப்படத் தாமதமானது.

அலயன்ஸ் குழப்பம் தொடர்கிறது:

இதற்கிடையே, சென்னையிலிருந்து வழக்கமாக இரவு 7.50 மணிக்கு கோவை வரும்விமானம் அக்டோபர் 1ம் தேதி ரத்து செய்யப்பட்டது.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கீழ் இந்த அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமான சர்வீஸ்நடந்து வருகிறது. இந்த விமானம் அடிக்கடி ரத்து செய்யப்படுவதால், போதுமானபயணிகள் இதில் பயணம் செய்வதில்லை எனக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X