முன்னாள் தலைமைச் செயலாளர் மீது புது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர் மீது புதிய வழக்கு ஒன்று செவ்வாய்கிழமை தொடரப்பட்டுள்ளது.

வருமானத்தை மீறி அவர் ரூ.72 லட்சத்து 44 ஆயிரம் அளவுக்கு சொத்துக்கள்சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலாவது தனி நீதிமன்றத்தில் லஞ்சஒழிப்பு பிரிவு போலீசார் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஹரிபாஸ்கர், அவரது மனைவி கோமதியம்மாள் உஷாதேவி, சித்ராவி.நாராயணி (மகள்), சுதிர் எஸ்.வி.ராஜன் ஆகிய நான்கு பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியின் போது தலைமைச் செயலாளராக இருந்தவர் ஹரி பாஸ்கர். இவர்மீது ஏற்கனவே இரண்டு ஊழல் வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்தது. அதில் கலர்டி.வி. ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். சிறையில் இருந்த அவர்தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடந்த ஊழல்தொடர்பான வழக்கிலும் இவர் குற்றவாளி. அந்த வழக்கில் இன்னும் தீர்ப்புகூறப்படவில்லை.

இந்நிலையில் மூன்றாவதாக இந்த சொத்துக் குவிப்பு வழக்கு அவர் மீதுதொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை இரண்டாவது தனி நீதிமன்றம் விசாரணைக்குஏற்றுள்ளது. வருகிற 23-ம் தேதி ஹரிபாஸ்கர் உள்ளிட்ட நால்வரை ஆஜராகுமாறுநீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+