தீவிரவாதத்தை முறியடிக்க இந்தியா-ரஷியா ஒப்பந்தம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியாவுடன் இணைந்து ரஷியா போராடும் என்று ரஷிய அதிபர் விலாடிமிர் புடின் கூறியுள்ளார்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள புடினுக்கு செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் 21 குண்டுகள் முழங்க புடினுக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது. அவருடன் மனைவி லூத்மிலா புடினாவும் வந்திருந்தார். இருவரையும், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர்வரவேற்றனர். பின்னர் அணி வகுப்பு மரியாதையையும் புடின் ஏற்றுக் கொண்டார்.

அதன் பிறகு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் புடின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினை பயங்கரவாதம். இதைஒடுக்குவதில் இரு நாடுகளும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியமானது.

இரு தரப்பு பொருளாதார, வர்த்தக, கலாசார, ராணுவ உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கு இந்தப பயணம் பயன்படும். ராணுவ மற்றும்தொழில்நுட்ப ஒத்துழைப்பை பலப்படுத்த இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்வேன்.

இரு நாடுகளுக்கும் இடையே, நீண்ட கால நட்பை பராமரிக்க இந்தப் பயணம் உதவும். சோவியத் யூனியன் காலத்தில் இருந்தது போலவே இரு நாடுகளின் நட்புஇப்போதும் இருக்கிறது.

அணு சக்தித்துறையில் இரு நாடுகளும் இன்னும் நெருங்கிச் செயல்படும். இருப்பினும் சர்வதேச விதிகளின்படியே அணு சக்தி தொடர்பான அனைத்துபரிமாற்றங்களும் அமையும் என்றார் புடின்.

முன்னதாக மகாத்மா காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்பாத்திற்கு புடின் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு பிரதமர்வாஜ்பாயை சந்தித்தார். இருவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசினர்.

புடின்-வாஜ்பாய் சந்திப்பின்போது பயங்கரவாதம் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக தெரிகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இரு நாடுகளும்பாதிக்கப்பட்டுள்ளதாக புடின், வாஜ்பாயிடம் தெரிவித்ததாகத் கூறப்பட்டது. செச்னியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு, ஆப்கானிஸ்தானின் தலிபான்அமைப்பினரே பயிற்சியும்,ஆயுதங்களும் கொடுத்து வருவதாக ரஷியா குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஊக்குவிப்பது குறித்து இந்தியாவின் பிரச்சினையை வாஜ்பாய், புடினுக்கு விளக்கியதாகத் தெரிகிறது.

புடினுடன் 90 பேர் கொண்ட உயர் மட்டக் குழு இந்தியா வந்துள்ளது. துணைப் பிரதமர் இலியா கிளபனோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் இகர்இவனோவ், பாதுகாப்பு அமைச்சர் மார்ஷல் இகர் செர்ஜியேவ், அணு சக்தித் துறை அமைச்சர் யெவ்ஜெனி அடமோவ், நீதித்துறை அமைச்சர் யூரிசைக்கியா ஆகியோரும் இதில் அடங்குவர்.

இந்தியாவுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ள ரஷியா விரும்புவதையே இது காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் புடின் பேசுகிறார். அதன் பிறகு அவருக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் புடினுக்குகெளவர டாக்டர் பட்டம் வழங்குகிறது. அதன் பின்னர் மும்பைக்குப் புறப்பட்டுச் செல்கிறார் புடின். அதற்கு முன்பாக ஆக்ரா சென்று தாஜ் மஹாலைபார்வையிடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+