மதுரை தமிழ் இயக்க மாநாட்டில் வீரப்பன் மனைவி
மதுரை:
மதுரையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்க மாநாட்டில் சந்தனக் கடத்தல் மன்னன்வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கலந்து கொண்டார்.
நடிகர் ராஜ்குமாரை கடத்தி காட்டில் வைத்துக் கொண்டு பேரம் பேசி வரும் வீரப்பன், சில நாட்களுக்கு முன் தமிழர் தேசியஇயக்கத் தலைவர் நெடுமாறனுக்கு ஒரு கேசட் அனுப்பினான்.
இந்நிலையில் தமிழர் தேசிய இயக்க மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் செவ்வாய் கிழமை தொடங்கியது. மாநாட்டுநிகழ்ச்சிகள் நடைபெற்று வரும்போது முத்துலட்சுமி அங்கு வந்தார். அவருடன் மகள் வித்யாராணி, மாமனார் குருசாமிஅய்யனார் ஆகியோரும் வந்தனர்.
மூவரும் சில நிமிடங்களுக்கு பின்னர் நெடுமாறனை சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்கள் அரங்கத்தை விட்டு சென்று விட்டனர்.
வீரப்பன் மனைவி எதற்காக வந்தார்? என் வந்தார் என்று தெரியவில்லை. மாநாட்டுக்கு நெடுமாறன் விடுத்த அழைப்பை ஏற்றுதான் வந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகள் - தமிழக விடுதலை அமைப்புகள் - தமிழர் தேசிய இயக்கம் ஆகியோருடன் இணைந்து வீரப்பன் செயல்பட்டுவருவதாக போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications