பெண்களை நிர்வாணமாக்கி சிகிச்சை அளிக்கும் "மாந்திரீக டாக்டர்"

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை நிர்வாணமாக்கி பூஜை செய்த மாந்திரீகடாக்டர் பாலப்பா பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக-ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள ஏக்மாய் கிராமத்தில் செயல்பட்டுவரும் இந்த மாந்திரீக டாக்டர், தான் பில்லி சூனியத்தைப் போக்குவேன் என்றும் பேய்,பிசாசுகளை விரட்டுவேன் என்றும் கூறி அப் பகுதி மக்களை நம்பவைத்தார்.

பேய், பிசாசு பிடித்துவிட்டது என்று அழைத்து வரும் பெண்களை நிர்வாணமாக்கிபின்னர் அவர்கள் மீது குங்குமம் மற்றும் மஞ்சள் பொடிகளைத் தூவி பூஜைநடத்துவார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு பேய், பிசாசுகளை விரட்டிவிட்டேன் என்று கூறி நிறையபணம் பெற்றுவந்தார். கடவுளின் ஆசை மற்றும் உத்தரவுப்படித்தான் நிர்வாணமாக்கிபூஜை செய்வதாகக் கூறி மக்களை அவர் நம்ப வைத்தார்.

பூஜை நடக்கும்போது அவரும், சிகிச்சை வந்த பெண்ணும் மட்டுமே தனியாகஇருப்பார்கள். அப்போது அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதேநேரத்தில் பூஜை முடிந்து வந்த பெண்கள், அந்த மாந்திரீக டாக்டரால்களங்கப்படுத்தப்பட்டனரா என்றும் தெரியவில்லை.

நன்கு படித்த டாக்டர்களால் குணப்படுத்த முடியாத நோய்களையும் தான்மாந்திரீகத்தால் குணப்படுத்துவேன் என்று கூறி ஏதும் அறியாத அப்பாவி மக்களைஅவர் நம்பவைத்திருந்தார். மேலும், அவரிடம் பூஜைக்குச் சென்று வந்தவர்களும்அவரது செயல் பற்றி இதுவரை வாய் திறக்காமலே உள்ளனர்.

போலீசிடமும் எந்தப் புகாரும் இல்லை. ஆனால் போலீஸே, அந்த மாந்திரீக டாக்டர்பாலப்பாவின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஒரு வழக்கைப் பதிவு செய்துவிசாரித்து வருகிறது என்று கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி எம்.டி. சிங் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டப் போலீஸாரும் பாலப்பா மீது ஒரு வழக்கைப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+