விசைத்தறி துணிகளின் ஏற்றுமதி 21 சதவீதம் அதிகரிப்பு
ஈரோடு:
கடந்த ஆண்டைக் காட்டிலும் விசைத்தறி துணிகளின் ஏற்றுமதி 21. 5 சதவீதம்அதிகரித்துள்ளது என விசைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் சேர்மன் மதிவாணன்தெரிவித்தார்.
ஈரோட்டில் விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதிக் கழகத்தின் சேர்மன் மதிவாணன்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த ஆண்டைக் காட்டிலும் விசைத்தறி துணிகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இந்திய ரூபாய் மதிப்பில் 21. 5 சதவீதமும், டாலர் மதிப்பில் 17.09 சதவீதமும்உயர்ந்துள்ளது. மேலும், ஏற்றுமதியாகும் துணிகளின் அளவும், மதிப்பும் கூடியுள்ளது.
இந்தியாவிலிருந்து பானிப்பட், மீரட், சென்னிமலை, கரூர் ஆகிய இடங்களிலிருந்துவிசைத்தறி துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டால், ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கமுடியும். எனவே, ஜவுளித் துறை அமைச்சர் மூலம் நிதியமைச்சகத்திற்குவிதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளோம்.
இந்தியா, ஒரு வணிக மையமாக மாற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
இந்தியாவின் ஏற்றுமதி இந்த ஆண்டு 15 ஆயிரத்து 532 மில்லியன் டாலர்களாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 6 ஆயிரத்து 400மில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கலால் வரி, வணிக வரி, ஆக்ட்ராய், போன்ற வரிகள் ஜவுளித் துறையை மிகவும்பாதிப்படையச் செய்துள்ளது. இதனை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும் என்றுமதிவாணன் கூறினார்.












Click it and Unblock the Notifications