பூசாரியை வளைத்துப் பிடித்த மலைப்பாம்பு
Subscribe to Oneindia Tamil
பழனி:
பழனி அருகேயுள்ள முருகன் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த பூசாரியை பிரமாண்டமான மலைப் பாம்பு சுற்றிக் கொண்டது. இதையடுத்து பெரும் பரபரப்புஏற்பட்டது.
வட்டாரு என்ற இடத்தில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்தது. கோவில் பூஜாரி செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பூஜைகள் செய்துகொண்டிருந்தார். அப்போது தண்ணீர் எடுப்பதற்காக குளத்திற்குச் சென்றார். அப்போது அங்கு படுத்திருந்த 12 அடி மலைப்பாம்பு பூஜாரி உடலை சுற்றிக்கொண்டது.
இதையடுத்து அவர் உதவி கேட்டு அபயக் குரல் எழுப்பினார். உடனியாக அக்கம் பக்கத்தில் இருந்தோர் அங்கு விரைந்து வந்தனர். மலைப்பாம்பைசிரமப்பட்டு பூஜாரி உடலிலிருந்து விடுவித்து அவரைக் காப்பாற்றினர்.
மலைப்பாம்பு பின்னர் சாக்குப் பையில் பிடிக்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அந்தப் பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது.












Click it and Unblock the Notifications