ஆப்கானில் போர்நிறுத்தம் செய்ய தலிபான் - எதிர்க்கட்சி முடிவு
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தம் செய்ய தலிபான் அரசும், அரசுக்கு எதிராகப்போராடி வரும் எதிர்க்கட்சியினரும் முடிவு செய்துள்ளனர்.
நாட்டில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் போலியோ நோய்த் தடுப்புப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையடுத்து போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும்முடிவு செய்துள்ளன.
இந்த நோய் தடுப்பு முகாம் அக்டோபர் மாதம் 12 -ம் தேதி முதல் 14-ம் தேதிவரையிலும், பின் நவம்பர் மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் நடைபெறஉள்ளது.
இப் போலியோ நோய்த் தடுப்பு முகாம் மூலம் நாடு முழுவதும் சுமார் 50 லட்சம்குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடு வீடாகச் சென்று குழந்தைகள் யாராவது போலியோ சொட்டு மருந்துகொடுக்கப்படாமல் உள்ளனரா என்பதைக் கண்டறிந்து அக் குழந்தைகளுக்குஅங்கேயே போலியோ சொட்டு மருந்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்பணியின்போதும் இரு தரப்பும் போர் நிறுத்தம் அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications