அளவுக்கு அதிகமான படைபலத்தைப் பயன்படுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அளவுக்கு அதிகமான படைபலத்தைப் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின்பாதுகாப்பு கவுன்சில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மேற்கு ஆசியாவில் நடைபெற்ற தாக்குதலில் 80-க்கும் அதிகமானபாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அளவுக்கு அதிகமான படைபலத்தை உபயோகிப்பதைக்கண்டிக்கவேண்டும் என்று ஐ.நா. சபையில் பாலஸ்தீனம் புதிய தீர்மானத்தைக் கொண்டுவந்தது.
இந்த தீர்மானத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்த பாதுகாப்பு கவுன்சில்,இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை உடனேதொடங்கும்படியும் அது கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications