மதுரையில் அதிமுகவின் 29-ம் ஆண்டு விழா
சென்னை:
அதிமுக வின் 29 ம் ஆண்டு விழாவையொட்டி மதுரையிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக தொடங்கி வரும் 17 ம் தேதி 29 வது ஆண்டு தொடங்குகிறது. கட்சி சார்பில் இதை மிகச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.இதையொட்டி, ஜெயலலிதா 17 ம் தேதி மதுரையிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, கட்சி கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கிவைக்கிறார். இவ்விழா மாலை 4.30 மணிக்கு நடக்கும்.
இதையடுத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டு மறைந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஜெயலலிதாகுடும்ப நல நிதியுதவி வழங்குகிறார்.
பின்னர் கட்சியின் ஆண்டுவிழாவையொட்டி கட்சித் தொண்டர்களுக்கும், கட்சி பொறுப்பாளர்களுக்கும் ஜெயலலிதா இனிப்பு வழங்குவார். உடல் ஊனமுற்றோர்,ஆதரவற்ற முதியோர், விதவைத் தாய்மார்கள் உள்ளிட்ட நலிவுற்றோருக்கு உதவிகள் செய்கிறார்.
மேலும், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் சேர்கின்றனர் என்று அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.