காஷ்மீர் கண்ணிவெடியில் தமிழக ராணுவ வீரர் சாவு
ஸ்ரீநகர்:
எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழக வீரர் உள்பட மூன்று வீரர்கள்தீவிரவாதிகளின் கண்ணி வெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குனி நுல்லாவில் திங்கள் கிழமைநண்பகலில் நடந்த தீவிரவாதிகளின் கண்ணி வெடி தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினரை ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு ஏற்றிச் சென்றபேருந்து சென்ற வழியில் இருந்த கண்ணி வெடி தீவிர வாதிகளால் ரிமோட்கண்டரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த 294 கிலோமீட்டர்நெடுஞ்சாலைதான் காஷ்மீர் பகுதியை இந்தியாவின் மற்ற பகுதியோடு இணைக்கும்நெடுஞ்சாலையாகும்.
குண்டுவெடிப்பில் தோரு ராம், முருகன், சித்தரஞ்சன் குமார் என்ற மூன்று எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை எந்ததீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
கடந்த மூன்று மாதங்களில் நடந்த மூன்றாவது மிகப் பெரிய கண்ணி வெடித் தாக்குதல்இதுவாகும்.
ஆகஸ்ட்மாதம் 13-ம் தேதி இதே நெடுஞ்சாலையில் குட் பகுதியில் நடந்த இரு கண்ணிவெடித்தாக்குதலில் 9 எல்லை பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மேலும்பலர் காயமடைந்தனர்.
ராணுவம் வீரர்களை அழைத்துச் செல்வதற்கு, ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு,பல்வேறு பொருட்களையும் காஷ்மீருக்கும், லடாக் பகுதிக்கு எடுத்துச் செல்லவும் இந்தநெடுஞ்சாலைதான் ஒரே வழியாகும்.
இந்த ஆண்டு மட்டும் கண்ணி வெடித் தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் ஒரு அமைச்சரும், ஒரு ராணுவ பிரிகேடியரும், ஒரு கர்னலும் அடங்குவர்
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications