Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாஜ்பாயை வாழ்த்திய இளந்தளிர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மூட்டு வலி சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கும் பிரதமர் வாஜ்பாய் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆதரவற்ற குழந்தைகள்திங்கள்கிழமை வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் பிரேயாஸ் என்ற தனியார் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமம் டெல்லி போலீஸ் இணைக் கமிஷனர் அமோத்காந்த் தலைமையில் செயல்படுகிறது.

பிரேயாஸ் ஆசிரமத்தைச் சேர்ந்த 6 முதல் 12 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள், திங்கள்கிழமை அறுவை சிகிச்சைக்காக பிரதமர் மும்பை புறப்படுமுன்அவரது இல்லத்துக்குச் சென்று வாழ்த்தினர்.

12 வயதான ரோஹித்தா என்ற சிறுமிக்கு, பிரதமர் வாஜ்பாய் எந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்? அவருக்கு எங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறதுஎன்பது குறித்து எதுவும் தெரியாது. ஆனால் அவளோ, பிரதமர் வாஜ்பாய் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வாழ்த்தினாள். அவளுடன்வாஜ்பாயை வாழ்த்த வந்திருந்த பிற ஆதரவற்ற சிறுமியர்கள் பிரதமருக்காக ஒரு பாட்டையும் பாடினார்கள்.

இதுகுறித்து பிரேயாஸ் இல்லத்தின் தலைவர் அமோத் காந்த் கூறுகையில், உடல்நலக் குறைவால் அறுவைசிகிச்சைக்குச் செல்லும்நிலையிலும், பிரதமர்எந்தவித எரிச்சலையும் காட்டாமல், சிரித்த முகத்துடன் எங்கள் இல்லக் குழந்தைகளின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு இனிப்பு வழங்கினர்என்றார்.

முன்னதாக, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ரஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோரும் பிரதமரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதற்குப்பின் பிற்பகல் 1.50 மணிக்கு பிரதமர் வாஜ்பாய் மூட்டு வலி அறுவை சிகிச்சைக்காக மும்பை புறப்பட்டுச் சென்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+