தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சிதான் சரி - ராமதாஸ்
காரைக்குடி:
தமிழகத்தில் ஒரு கட்சிதான் சரியாக இருக்கும். கூட்டணி ஆட்சி தேவையில்லை என்றுபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ். ராமதாஸ் தெரிவித்தார்.
காரைக்குடியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி கொள்கைகளுக்கும், விவசாயிகளின்பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து போராடி வருகிறது.
தமிழகத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கப்படுவதில்லை.ஏழைகளுக்கு ஒரு மாதிரியாகவும், பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியாகவும் கல்விஅளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரம் மோசமாக உள்ளது.
சமூக நீதியில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திஎல்லா தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.
வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை அரசுத் துறையில் 4 சதவீதம் மட்டும்வேலைவாய்ப்பு உள்ளது. மீதமுள்ள 96 சதவீதம் தனியார் துறையில்தான். எல்லாதரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதால் தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு கேட்டு தமிழகத்திலும், நாடு தழுவிய அளவிலும் பாமகபோராடி வருகிறது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சரியாக வராது. அது தேவையும் இல்லை. ஒரு கட்சிஆட்சிதான் சிறந்தது. அதனால், ஆட்சியில் பங்கு கொடுத்தாலும் அதை ஏற்கக்கூடாதுஎன்பதுதான் பாமகவின் கொள்கை. அப்படிக் கொடுத்தாலும் அதை பாமகஒருபோதும் ஏற்காது என்றார் ராமதாஸ்.