Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்டர்நெட் வர்த்தகம்: கேரள ரப்பர் விவசாயிகளுக்குப் பயனளிக்கும்

Subscribe to Oneindia Tamil

கொச்சி:

இன்டர்நெட் வர்த்தகத்தால் கேரள மாநில ரப்பர் விவசாயிகள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் முதல் இன்டர்நெட் இணைப்பகம் கல்கத்தாவில் நவம்பர் 15-ம் தேதி திறக்கப்படவுள்ளது. சுமார் ரூ.40 லட்சம் செலவில் இந்த இணைப்பகம்அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்டர்நெட் இணைப்பகம் செயல்படத் தொடங்கிவிட்டால் இந்தியாவில் இன்டர்நெட் வர்த்தகம் விரிவடையும். இதனால், கேரள ரப்பர் விவசாயிகள்அதிகம் பயன்பெறுவார்கள் என்று இன்ட்நெட் இணைப்பகத்தின் அதிகாரி பிஜு நாயர் தெரிவித்தார்.

இப் புதிய இன்டர்நெட் இணைப்பகம் 30 சதவீதம் நாட்டின் ரப்பர் வணிகத்தின்மீதுதான் கவனம் செலுத்தும். அது தவிர, வங்கியியல், இன்சூரன்ஸ், மரவியாபாரம் ஆகியவை தொடர்பான தகவல்களையும் இந்த இணைப்பகம் வழங்கும்.

ரப்பர் மற்றும் ரப்பர் உற்பத்திப் பொருட்கள் வியாபாரத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இந்த இன்டர்நெட் இணைப்பகத்தின மூலம் ரப்பர்விவசாயிகள் பெறமுடியும் என்றார் பிஜு நாயர்.

இந்தியாவில் கேரளத்தில்தான் அதிக ரப்பர் விளைகிறது. தற்போது அங்கு ஒரு கிலோ ரப்பர் ரூ. 26 முதல் ரூ. 30 வரை விற்கப்படுகிறது. 1996-ம்ஆண்டுதான் அதிகபட்சமாக ஒரு கிலோ ரப்பர் ரூ. 51.22-க்கு விற்கப்பட்டது.

உலகின் ரப்பர் சந்தை என்று அழைக்கப்படும் கோலாலம்பூரை விட கேரள ரப்பர் விலை கிலோவுக்கு ரூ.6 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+