பாரீஸ் உலக ஜவுளிக் கண்காட்சியில் 50 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இம் மாதம் நடைபெற உளக டெக்ஸ்வேர்ல்டுஅக்டோபர் 2000 என்ற உலக ஜவுளிக் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 50பெரியஜவுளி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
உலக அளவில் நடைபெறும் ஜவுளிக் கண்காட்சியில் இவ்வளவு அதிகமாக இந்தியஜவுளி நிறுவனங்கள் கலந்து கொள்வது இதுவே முதன்முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
பாரீஸின் வடக்குப் பகுதியில் உள்ள லா டிபென்ஸ் வளாகத்தில் இக் கண்காட்சிநடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது.
இக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் இந்திய ஜவுளி நிறுவனங்களில் ரிலையன்ஸ்,கிராஸிம், குவாலியர், ரேமன்ட்ஸ், எஸ். குமார், பனாரஸ் சில்க், பி.எஸ்.எல்., இந்தியன்ரேயான் ஆகியவை குறிப்பிடத்தக்க பெரிய நிறுவனங்களாகும்.
சுமார் 31 நாடுகளைச் சேர்ந்த 330 நிறுவனங்கள் இக் கண்காட்சியில் கலந்து கொண்டுதங்களது உற்பத்திப் பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன. பாரீஸில் நடைபெறும்இக் கண்காட்சிதான் உலக அளவில் மிகப் பெரிய ஜவுளிக் கண்காட்சியாகும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications