வருகிறது "இ-போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இ-போஸ்ட் என்ற பெயரில் இ-மெயில் வசதி அஞ்சலகம் மூலம் அறிமுகப்படுத்தப்படஉள்ளது என தமிழக முதன்மை அஞ்சலக அதிகாரி மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதன்மை அஞ்சலக அதிகாரி மேனன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:

பல கிளைகளில் செயற்கைகோள் மூலம் மணியார்டர் அனுப்பும் வசதி செயல்பட்டுவருகிறது. தற்போது, இ-போஸ்ட் என்ற பெயரில் இ-மெயில் வசதி அஞ்சலகம் மூலம்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில்அறிமுகப்படுத்தப்படும். இந்த வசதி மூலம் இ- மெயில் வசதி இல்லாதவர்கள் இ-போஸ்ட் மூலம் தகவல்கள் அனுப்பலாம்.

தீபாவளி, பொங்கல்,கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கான வண்ணமயமானவாழ்த்து அட்டைகள் அஞ்சல் துறையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

5 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் அஞ்சலக அலுவலங்களில் வாழ்த்து அட்டைகள்அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பல்வேறுபண்டிகைகளுக்கான வாழ்த்து அட்டைகள் தீபாவளி முதல் அனைத்து தலைமைஅஞ்சஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும்.

இந்த வாழத்து அட்டைகளின் விலை 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை இருக்கும்.பெரும் நிறுவனங்கள் மொத்தமாக ஆர்டர் செய்து தங்கள் வாடிக்கையாளர்களுக்குஇந்த வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம்.

வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அஞ்சலக வாரம் கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில் 99 அஞ்சலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. 6 தலைமைஅஞ்சலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 7 தலைமைஅஞ்சலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+