பிரதமரின் அறுவைச் சிகிச்சை முடிந்தது
மும்பை:
பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டு வலிக்கான அறுவைச் சிகிச்சை செவ்வாய்க்கிழமைவெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மும்பை பிரீச்கன்டி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. நியூயார்க்கைச்சேர்ந்த இந்திய டாக்டர் சித்தரஞ்சன் ரனவத் இந்த அறுவைச் சிகிச்சையை செய்தார்.
சுமார் இரண்டு மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடந்ததாகவும், எந்தவிதமானபிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.
அறுவைச் சிகிச்சை தொடர்பான விவரங்கள் குறித்து பிற்பகலுக்கு மேல் மத்தியபாதுகாப்பு அமைச்சர் அத்வானியும், டாக்டர் ரனவத்தும் விளக்குவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அறுவைச் சிகிச்சை நடந்த ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் உள்ளிட்ட பல தலைவர்கள்குழுமியிருந்தனர்.
அறுவைச் சிகிச்சை நடந்த பிரீச்கன்டி மருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
முன்னதாக திங்கள்கிழமை டாக்டர் ரனவத் கூறுகையில், அறுவைச் சிகிச்சைக்குப்பின்னர் 10 நாட்களில் பிரதமர் வாஜ்பாய் குணமடைவார் என்று தெரிவித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications