காட்டுக்குப் போவது ஏன்? நெடுமாறன் விளக்கம்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க நாங்கள் உதவ வேண்டும் என தமிழக, கர்நாடக அரசுகள் கேட்டுக் கொண்டதால்காட்டுக்குப் போகிறோம் என்று வீரப்பனைச் சந்திக்க தூதராக காட்டுக்குச் சென்றுள்ள தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை சத்தியமங்கலம் காட்டுக்குக் கிளம்பும் முன் அவரும், அவருடன் காட்டுக்குச் சென்றுள்ளபேராசிரியர் கல்யாணியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
அறிக்கையில், தற்போதைய நெருக்கடிக்குக் காரணம், கடந்த காலத்தில் வீரப்பன் விடுத்த கோரிக்கைகளைஅலட்சியப்படுத்தியதுதான்.
கடந்த பல காலமாக மனித உரிமைக்காக போராடி வருகிறோம். தடா போன்ற சட்டங்களை எதிர்த்து வருகிறோம்.இந்தச் சூழ்நிலையில் தமிழக, கர்நாடக முதல்வர்களின் கோரிக்கையை எங்களால் தட்டிக் கழிக்க முடியவில்லை.ராஜ்குமார் விவகாரத்தில் தீர்வு காண முடிவு செய்தோம்.
கட்சிக்கு அப்பாற்பட்டு எங்களை அமைதி காண முயற்சிப்பவர்களாகவே இரு மாநில மக்களும் எங்களைப் பார்க்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இன்னொரு தூதரான சுகுமாரன், பாண்டிச்சேரி முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், நெடுமாறன் தலைமையிலானபுதிய குழு நிச்சயம் ராஜ்குமாருடன்தான் திரும்பும். மக்களின் ஆசிர்வாதத்துடன் காட்டுக்குப் புறப்படுகிறோம் என்றுகூறியிருந்தார்.
பாண்டிச்சேரி மக்கள் சிவில் விடுதலைக் கழக தலைவர் ரவிக்குமார் மூலம் இந்தக் கடிதம் பாண்டி முதல்வர்சண்முகத்திற்கு அனுப்பப்பட்டது.
யு.என்.ஐ.