ரூ. 2 லட்சத்தை "சாப்பிட்ட சமையல்காரருக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

கோவை:

சமையல் வேலை செய்து தருவதாகக் கூறி ரூ. 2 லட்சம் வரை மோசடி செய்த சமையல்காரரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

பைனான்ஸ் மோசடி, நகை மோசடி வரிசையில் பல மோசடிகள் நடந்தன. ஆனால் திறமை இருந்தால் விஷேசங்களுக்குச் சமையல் செய்து தருவதாகக் கூறி 20பேரிடம் ரூ. 2 லட்சம் வரை வாங்கியுள்ளார். இவர் திண்டிவனத்தைச் சேர்ந்தவர்.

கோவை கணபதி, கட்டபொம்மன் வீதியில் சமையல் வேலைக்காரராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (45). இவர் திண்டிவனத்தைச் சேர்ந்தவர். தனதுபேச்சு சாதுர்யத்தால், பலரிடம் சென்று சமையல் வேலை செய்து தருவதாக் கூறியுள்ளார்.

மேலும் பல ஓட்டல்களில் சென்று சமையல் வேலை செய்து தருவதாகக் கூறி முன்பணம் பெற்றுள்ளார். முன்பணம் பெற்றுக் கொண்ட பின்னர், வேறுஓட்டலுக்குச் சென்று இதே போன்று தனது பழைய பாணியை பின்பற்றி பணம் பெற்றுள்ளார்.

இதே போன்று திருமணங்களுக்குச் சமையல் செய்து தருவதாகக் கூறி பலரிடம் முன்பணம் பெற்றுள்ளார். இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர்அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டுத் தலைமறைவாகி விடுவார். இது போன்று 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 லட்சம் வரை பணத்தைப்பெற்றுக் கொண்டு "ஏப்பம் விட்டுள்ளார். இப்போது தலைமறைவாக உள்ளார்.

இது பற்றிய புகாரின் பேரில் கணபதி போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தூர் பாண்டியனைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+