டான்சி வழக்கின் ஹீரோ சுப்பிரமணியம் சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி ஊழல் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தான்.

டான்சி நில பேரம் குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக முதன் முதலில் வழக்குத் தொடர கவர்னரின்அனுமதி கோரி சுவாமி தான் மனு கொடுத்தார். அதற்கு முன்பாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத்தொடர்ந்தார்.

ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் அவர் மீது வழக்குத் தொடர கவர்னரின் அனுமதி தேவை என்று கூறி அந்த வழக்கைசெஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இதையடுத்து அப்போதைய கவர்னர் பீஷ்மநாராயண்சிங்கிடம் அனுமதி கேட்டார். ஆனால், ஜெயலலிதாவின் ஜால்ராவாகவிளங்கிய பீஷ்மநாராயண் சிங் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.

அதை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தார் சாமி. இவ்வழக்கு விசாரணையில் இருக்கும்போதுபீஷ்மநாராயண் சிங் மாற்றப்பட்டு, மறைந்த சென்னாரெட்டி கவர்னாக பொறுப்பேற்றார்.

சுவாமியின் நெருங்கிய நண்பராக இருந்த சென்னா ரெட்டி, ஜெயலலிதா மீது வழக்குத் தொடர சுவாமிக்கு அனுமதி வழங்கினார்.

நல்ல பெயர் முழுக்க முழுக்க சுவாமிக்கு செல்வதைத் தடுக்கவும் இப்பிரச்னையில் முந்திக் கொள்ளவும் திமுக தயாரானது. அக்கட்சியில் சட்டப் பிரிவுச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெயரில் வக்கீல் சண்முகசுந்தரம் என்பவர் டான்சி நிலம் விற்பனைதொடர்பாக சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர கவர்னரின் அனுமதி தேவையில்லை என்று திமுக தரப்பில்வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற மாஜிஸ்திரேட் ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பினார்.

இந் நிலையில் ஒரு இரவு நேரத்தில் வக்கீல் சண்முகசுந்தரம் கடுமையாக தாக்கப்பட்டார். அவரது விரல்கள் துண்டாகிப் போயின.மருத்துவமனையில் குற்றுயிரும் குலை உ.யிருமாக சேர்க்கப்பட்டார். அவரை இரவோடு இரவாக கருணாநிதியும், ஆற்காடுவீராசாமியும் மருத்துவமனையில் வந்து பார்த்தனர். இந்த தாக்குதல் கும்பலை ஜெயலலிதா தான் அனுப்பியதாக கருணாநிதிகுற்றம் சாட்டினார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும வக்கீல்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். நீதிமன்றங்க் ஸ்தம்பித்தன.

அப்போது நிலவிய பெரும் குழப்பத்திற்கு மத்தியில் கவர்னரின் அனுமதியுடன் முறைப்படி செஷன்ஸ் நீதிமன்றத்தில்ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரமணியம் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து டான்சி நில விற்பனை தொடர்பாகவிசாரிக்குமாறு போலீசாருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நடந்து கொண்டேடட..... இருந்தது. ஜெயலலிதாஆட்சி போனது. கருணாநிதி முதல்வரானார். விசாரணை மிகத் துரிதமானது.

இறுதியில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனி நீதமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இப்போது ஜெயலிதாவை ஜெயில் தள்ள உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

இந்த வழக்கில் உண்மையான ஹீரோவான சுப்பிரமணியம் சுவாமி, பின்னர் ஜெயலலிதா கூட்டணியிலேயே சேர்ந்து மதுரைஎம்.பியானதும், அதன் பின்னர் மீண்டும் ஜெயலலிதாவின் எதிரியானதும் அரசியல் அசம்பாவிதங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+