அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்
மதுரை:
அ.தி.மு.க. கூட்டணிக்கு இப்போது வரை ஜெயலலிதா தான் தலைவர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்,
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
கேள்வி: ஜெயலலிதா 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்று கூறப்படுகிறதே?
பதில்: இதுபோன்று தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க டியாது என்று டி.என்.சேஷன் போன்றவர்கள் கருத்துதெரிவித்துள்ளனர். இந்த பிரச்னை குறித்து வேறு பல சட்ட நிபுணர்களும் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில்பார்க்கும்போது தேர்தலில் நிற்கலாம் என்றும் தெரிகிறது.
கேள்வி: இந்தச் சூழ்நலையில் இன்னொரு அணி தமிழ்நாட்டில் உருவாகுமா?
பதில்: 2 அணி தான் இப்போது உள்ளது. ஒன்று மதச்சார்பற்ற அணி. இன்னொன்று மதச்சார்புள்ள அணி.
கேள்வி: உங்களது மதச்சார்பற்ற அணிக்கு தலைமை வகிப்பது யார்?
பதில்: இப்போது ஜெயலலிதா தான் தலைமை தாங்குகிறார். அவர் தேர்தலில் நிற்க முடியுமா முடியாதா என்ற குழப்பம் உள்ளது.பாதகமான நிலை வந்தால் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தலைவர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியாதீர்மானிப்பார்.
கேள்வி: ஜெயலலிதாவுக்கும் தண்டனை கிடைத்துள்ளதால், காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு வருமா?
பதில்: எந்த பாதிப்பும் வராது. எங்கள் கூட்டணி தொடரும்.
கேள்வி: உங்களுக்கும் காளிமுத்துவுக்கும் இடையிலான சண்டை எந்த நிலையில் உள்ளது?
பதில்: அது முடிந்து விட்டதே. அவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூடகூறியிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கேள்வி: வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த நெடுமாறனை அனுப்பியது பற்றி?
பதில்: அது தவறு.
கேள்வி: உங்கள் கூட்டணியில் தி.க. தலைவர் கி.வீரமணி இருப்பதை சுப்ரமணியம் சுவாமி கண்டித்துள்ளாரே?
பதில்: சாமி ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications