வாஜ்பாய்க்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை:
மும்பையில் பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது குறித்துதமிழக முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பூரண நலம் பெற்று பழைய ஆரோக்கியத்துடன் மீண்டும் அவர் பிரதமர் பணியாற்ற வேண்டும் என்று அவர் வாழ்த்திஉள்ளார்.
மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட பிரதமர் வாஜ்பாய்க்கு மும்பை பிரிச் கண்டி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமைஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தற்போது மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கும்பிரதமருக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பியுள்ளார்.
அந்த செய்தியில் உங்களுக்கு நடைபெற்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள தகவல்அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். நீங்கள் விரைவில் குணமடைந்து பூரண நலம் பெற்று அதே ஆரோக்கியத்துடன் திகழவேண்டும் என்றும், மீண்டும் அதே ஆற்றல் உறுதியுடன் பிரதமர் பணியை கவனிக்க வேண்டும் என்றும்வாழ்த்துகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications