மொராக்கோவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தப் போகிறார் அமர்நாத்
துபாய்:
மொராக்கோ நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நடவடிக்கையாகமொராக்கோவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஷார்ஜாவைச் சேர்ந்த கிரிக்கெட்வீரர்கள் நல நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளை இந்த அமைப்புதான் நடத்திவருகிறது. மொராக்கோவில் நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கானநடவடிக்கைகளை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மொஹீந்தர் அமர்நாத்கவனிக்கவுள்ளார்.
ஷார்ஜாவைப் போலவே, மொராக்கோவையும் கிரிக்கெட் தளமாக மாற்ற இந்தஅமைப்பு முடிவு செய்துள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்த அமைப்பில் மொஹீந்தர்அமர்நாத்தும், அவரது சகோதரர் சுரீந்தர் அமர்நாத்தும் இணைந்து செயல்பட்டுவருகின்றனர். மொஹீந்தர் ஒருங்கிணைப்பாளராக சேர்ந்துள்ளதாக அமைப்பின்துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் புகாதிர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
புகாதிர் கூறுகையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆசிப் இக்பாலுடன் சேர்ந்துமொஹீந்தர் அமர்நாத் செயல்படுவார். ஷார்ஜா மற்றும் மொராக்கோவில் கிரிக்கெட்போட்டிகளை நடத்துவது குறித்து இவர்கள் முடிவு செய்வர் என்றார்.
மொராக்கோ கிரிக்கெட் குறித்து அமர்நாத் கூறுகையில், முன்பு மொராக்கோசென்றிருந்தபோது, அங்கு கிரிக்கெட் குறித்து யாருக்கும் தெரியவில்லை. ஆனால்இப்போது ஓரளவு நிலைமை மாறுபட்டுள்ளது. சிறு, சிறு அணிகள் அங்கு வந்துவிட்டன. லீக் கிரிக்கெட் போட்டிகளும் கூட நடத்தப்படுகின்றன.
காசாபிளான்கா, ரபாத், டேங்கியர்ஸ் ஆகிய நகரங்களில் கிரிக்கெட் போட்டிகளைநடத்த முடிவு செய்துள்ளோம். மொராக்கோவிற்கு துணை உறுப்பினர் பதவியியைவாங்கித் தருவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் பேசுவோம் என்றார்.
புகாதிர் தொடர்ந்து கூறுகையில், ஐக்கிய அரபு நாடுகளில் கிரிக்கெட்டைபிரபலப்படுத்துவது எளிதான ஒன்று. ஆனால் மொராக்கோவில் அது சாத்தியமில்லை.காரணம், கிரிக்கெட் குறித்த பால பாடத்திலிருந்து அங்கு துவங்க வேண்டியுள்ளதுஎன்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.