அரசியல் சுவடுகளிலிருந்து கவியுலகிற்கு ...
டெல்லி:
இந்தியாவின் புகழ் பெற்ற அரசியல் குடும்ப வாரிசுகளில் ஒருவரான பெரோஸ் வருண்காந்தி எழுதிய கவிதைப் புத்தகம் செவ்வாய்க்கிழமை டெல்லியில் வெளியிடப்பட்டது.
சஞ்சய் காந்தி, மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி ஒன்னெஸ் ஆப் செல்ஃப்என்ற கவிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் 48 கவிதைகள் உள்ளன. மனிதஉணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கவிதைகள் எழுதப்பட்டுள்ளதாகவருண் காந்தி கூறியுள்ளார்.
புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி,அருண் ஷோரி, ராஜ்நாத் சிங், விஜய் கோயல், மதன்லால் குரானா, ஷாகிப் சிங் வர்மா,முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, காங்கிரஸ் தலைவர்கள் தவான்,ஜிதேந்திரா பிரசாத் மற்றும் அஜித் சிங் போன்றோர் கலந்து கொண்டனர்.
வருண் காந்திக்கு தற்போது 20 வயதாகிறது. இவரது தாயார் மேனகா காந்தி மத்தியசமூக நீதித்துறை அமைச்சராக இருக்கிறார். வருணின் தந்தை சஞ்சய் காந்தி. முன்னாள்இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன். அவர் 1980-ம் ஆண்டுநடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். வருண் லண்டன் ஸ்கூல் ஆப்எகனாமிக்சில் படித்தவர்.
நிகழ்ச்சியில் வருண் பேசுகையில், கவிதை எழுதும் ஆர்வம் தானாகவே வந்தது. எனதுகவிதைகள் மகிழ்ச்சி, துக்கம், வெற்றி மற்றும் தோல்வி போன்ற மனித உணர்வுகளைஅடிப்படையாகக் கொண்டு அமைந்தவை என்றார்.
எனது படைப்பை என் அம்மா படிக்கவில்லை. ஏதாவது ஒரு கவிதையைபடித்திருக்கக்கூடும். எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் ஹரிவன்ஷ் ராய் பச்சன், துஷ்யந்த்குமார், மகாதேவி வர்மா மற்றும் பப்லோ நெருடா போன்றோர் என்றும் வருண்தெரிவித்தார்.
அவரது ஒன்றுவிட்ட சகோதரியும், ராஜீவ்-சோனியா தம்பதியினரின் மகளுமானபிரியங்கா காந்தி நிகழ்ச்சிக்கு வருவாரா என கேட்ட போது நான் குடும்ப விஷயங்கள்பற்றி பேச விரும்பவில்லை என பதிலளித்தார்.
அருண் ஜெட்லி பேசுகையில், வருணிடம் நிறைய திறமை உள்ளது. அவை எப்படிவளர்கிறது என பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அடுத்த திட்டம் என்ன என்றுவருணிடம் கேட்ட போது, பார்க்கலாம் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.