For Daily Alerts
Just In
தீக்குளிக்க முயன்ற அதிமுக பெண் தொண்டர் கைது
மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் தண்டனை அளித்ததைக் கண்டித்து தீக்குளிக்க முயன்ற அதிமுக பெண் தொண்டரைபோலீஸார் கைது செய்தனர்.
தீக்குளிக்க முயன்ற பெண் அலங்காநல்லூர் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் ஆவார். புதன்கிழமை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த அவர் தன்னிடமிருந்தமண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கிருந்த போலீஸார் உடனடியாக விரைந்து அவரைக் காப்பாற்றினர். பின்னர் கைது செய்தனர்.
இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மதுரை நகரில் போராட்டம் நடத்திய முன்னாள் மேயர் உள்பட 18 அதிமுகவினரை போலீஸார் கைதுசெய்னர். அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.
Comments
Story first published: Thursday, October 12, 2000, 5:30 [IST]