அதிமுக கூட்டணிக்குப் பாதிப்பில்லை .. திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனைவிதிக்கப்பட்டுள்ளதால் அதிமுக தலைமையிலான சாதி, மதசார்பற்ற அணிக்கு எந்த பதிப்பும் ஏறுபடப் போவதில்லை என்றுவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
டான்சி நில வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புஇறுதியானதல்ல. மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு முடிகிறவரையில் இத்தீர்ப்பை மக்கள் பொருட்படுத்தப் போவதில்லை.
இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலானமதச்சார்பற்ற அணிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதில் அரசியல்உள்நோக்கம் உள்ளதை கண்டித்து அதிமுகவினர் நடத்தியமறியல் போராட்டம் நியாயமானது. அவர்களை கைது செய்ததுகண்டிக்கத்தக்கது என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications