"விரைவில் நடப்பார் வாஜ்பாய்
மும்பை:
பிரதமர் வாஜ்பாயுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்து இரண்டு நாட்களாகிஇருக்கிறது. தற்போது அவர் உடல்நிலை நன்கு தேறி வருகிறது.
மூட்டுவலி காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிந்த வாஜ்பாயுக்கு கடந்த 10-ம் தேதிமூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்து இரண்டுநாட்கள் ஆகியுள்ள நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் தெரிகிறது.
அறுவைச் சிகிச்சைக்குப்பின் அளிக்கப்பட வேண்டிய பிசியோதெரபி சிகிச்சைதற்போது நடந்து வருகிறது. தொடர்ந்து சில நாட்களுக்கு பிசியோ தெரபி நடைபெறும்என்றும், பின்னர் பிசியோதெரபி அளிப்பவரின் உதவியுடன் வாஜ்பாய் நடக்கத்தொடங்குவார்ர் என்றும் வாஜ்பாய் சிகிச்சை பெற்று வரும் பிரீச்கன்டி மருத்துவ மனைதரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாஜ்பாய்க்கு சிகிசசை அளித்த நியூயார்க் மருத்துவர் சித்தரஞ்சன் ரனவத்வியாழக்கிழமை மாலை வாஜ்பாய் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடுவார் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாஜ்பாய் உடல்நிலை குறித்து டாக்டர் ரனவத்திருப்தி தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே, வாஜ்பாய் புதன்கிழமை இரவு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் மற்றும்துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மகாராஷ்டிர ஆளுநர் அலெக்சாண்டர்,அம்மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் துணை முதல்வர் சங்கன் புஜ்பால்ஆகியோர் வாஜ்பாயை சந்தித்து விரைவில் நலம் பெற வாழ்ததுக் கூறினார்கள்.
வாஜ்பாய் இரவு தூங்கும் முன் தன் குடும்பத்தாரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications