For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்த கனடா மல்யுத்த வீரர்

By Staff
Google Oneindia Tamil News

சுர்ரே (பிரிட்டிஷ் கொலம்பியா):

சிட்னி ஒலிம்பிக்கில், கனடா மல்யுத்த வீரர் வாங்கிய தங்கப் பதக்கத்திற்காகஇந்தியர்களும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் அவர் கனடா குடியுரிமைபெற்ற இந்தியரின் தத்துப் புத்திரன்.

"டூபான் சிங் என அழைக்கப்படும் டேனியல் இகாலிதான் இந்த பெருமைக்குச்சொந்தக்காரர். 69 கிலோ பிரிவில் ரஷியாவின் ஆர்சன் கிட்டினோவை 7-4 என்றவெற்றிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார் இகாலி.

சிட்னி போட்டிக்கு முன்பு, துருக்கியின் அங்காரா நகரில் கடந்த ஆண்டு நடந்த உலகமல்யுத்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் இகாலி என்பதுகுறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் 21 பேர் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் இகாலி. அங்கிருந்து 1994-ம்ஆண்டு விக்டோரியா நகருக்கு வந்தார். அவருக்கு வான்கூவரைச் சேர்ந்த இந்தியத்தொழிலதிபர் சத்னம் சிங் ஜோஹல் 2 ஆண்டுகள் தனது வீட்டில் தங்குவதற்குஅடைக்கலம் கொடுத்தார். சத்னம் சிங் தீவிர மல்யுத்த ரசிகர். இகாலிக்கு கனடாகுடியுரிமையையும் வாங்கிக் கொடுத்தார்.

1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இகாலி பஞ்சாப் வந்தார். பி.சி.கபாடி கழகஅணியுடன் அவர் கனடாவிலிருந்து, பஞ்சாப் வந்தார். பஞ்சாப் மாலிம் ஹக்கீம்பூர்கிராமத்தில் நடந்த கபடிப் போட்டியிலும் அவர் கலந்து கொண்டார். அந்தகிராமத்தினரின் ஆரவாரத்தையும் பெற்றார்.

கபடியில் அவர் சிறந்த ரைடர் என்று பாராட்டையும் பெற்றார். இதனால் அவருக்குடூபான்சிங் என்றும் பெயர் வந்தது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று விட்டு தாயகம் திரும்பிய இகாலிக்கு, ஹீரோவுக்கானவரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில், கனடிய இந்தியர்கள் பெரும்திரளாக கூடி தங்களது தத்துப் புதல்வனை வாழ்த்தினர்.

கனடாவில் 6,50,000 இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X