விரைவில் விடுவிக்க முயற்சியுங்கள் .. கேசட்டில் ராஜ்குமார்
பெங்களூர்:
வீரப்பனிடமிருந்து தன்னை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறுசந்தன வீரபபனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் தனதுகுடும்பத்தினருக்கும், கர்நாடத முதல்வர் கிருஷ்ணாவுக்கும் வேண்டுகோள் விடுத்துகேசட் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
இந்த கேசட் ராஜ்குமார் குடும்பத்தாருக்கு கடந்த வாரத் துவக்கததிலேயே வந்ததாகதெரியவந்துள்ளது. ஆனால கேசட் இப்போதுதான் வெளியிடப்பட்டிருக்கிறது.
கேசட்டில் ராஜ்குமார் தனது குடும்பத்தாருக்கு கூறியிருப்பதாவது:
வீரப்பனிடமிருந்து விரைவில் என்னை விடுவிக்க முயற்சி செய்யுங்கள். நாகப்பா தப்பிவந்த பின்பு வீரப்பன் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது.
நாகப்பா இருக்கும் வரை எனக்கு இருந்தான். அவன் இல்லாமையால் எனக்குகஷ்டமாக இருக்கிறது. விரைவில் என்னையும், என்னோடு இருப்பவரையும் விடுவிக்கமுயற்சி எடுங்கள் என கூறியுள்ளார்.
அந்த கேசட்டிலேயே கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கும் செய்தி அனுப்பியுள்ளார்ராஜ்குமார்.
அதில், அவர், எங்கள் மூவரையும் வீரப்பனிடமிருந்து விரைவில் விடுவிக்க முயற்திசெய்யுங்கள். துர்ப்பாக்கியமான நிலையில் நீண்ட நாட்களாக இருக்கிறோம். விரைவில்எங்களை விடுவிக்க முயற்சி எடுங்கள் என தெரிவித்துள்ளார் ராஜ்குமார்.