For Daily Alerts
Just In
திண்டுக்கல் வெடி விபத்தில் பெண் பலி
திண்டுக்கல்:
அனுமதியின்றி வெடிதயாரித்தவர் வீட்டில் இருந்த வெடி வெடித்ததில் பெண் இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரில் வசித்து வருபவர் பொன்ராஜ்.இவர் தன் சொந்த ஊரான எரியோட்டில் முறையான அனுமதி பெறாமல் வெடிதயாரித்து வந்துள்ளார்.
சனிக்கிழமையன்று திடீரென்று வெடி மருந்துகள் தீ பற்றி வெடித்ததில் பொன்ராஜின்மனைவி லட்சுமி மூச்சு திணறி இறந்தார். பொன்ராஜுக்கு இரண்டு விரல்கள்துண்டாகின.
இந்த விபத்தில் அவரது மகள் அழகு ராணி, மகன் மாரியப்பன் ஆகியோரும்காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
Comments
Story first published: Sunday, October 15, 2000, 5:30 [IST]