கையில்லாமல் பிறந்த குழந்தைக்கு கை கொடுத்த டாக்டர்
காலாலம்பூர்:
கையில்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு இறந்துபோன குழந்தையின் கையைப் பொறுத்திக்காட்டி சாதனை புரிந்துள்ளார் தமிழ் டாக்டர்.
5 மாதங்களுக்கு முன் கோலாலம்பூரில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது லி-ஜெங் என்றஅந்தக் குழந்தை பிற குழந்தைகளைப் போல ஆரோக்கியத்துடன் வாழ்கிறது.
கோலாலம்பூரில் சீன தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு குழந்தை மூளைசேதமடைந்து இறந்தே பிறந்தது. மற்றொரு குழந்தைக்கு இடது கை இல்லை.
இடது கை இல்லாத குழந்தைக்கு இறந்த குழந்தையின் கையை எடுத்துப் பொறுத்த முடிவு செய்தனர்.இந்தப் பணி மைக்ரோ சர்ஜனான டாக்டர் பத்மநாதனிடம் தரப்பட்டது. அவர் சுமார் 15 மணி நேரம்போராடி கையை குழந்தைக்குப் பொறுத்தினார்.
அப்போது அந்தக் குழந்தைக்கு வயது வெறும் 4 வாரங்களே. செலயாங் மருத்துவமனையில் 55 பேர்கொண்ட பெரிய டீம் பத்மநாதன் தலைமையில் 15 மணி நேரம் போராடி சாதனை படைந்தது.
கை அறுவை சிகிச்சை நடந்த முதல் வாரத்தில் அந்தப் பிஞ்சுக் கரம் வீங்க ஆரம்பித்துவிட்டது.பின்னர் சிகிச்சைகள் கொடுத்து வீக்கத்தைக் குறைத்தோம். இப்போது கை வளர்கிறது. முட்டுமடங்குகிறது என சந்தோஷமாய் சொல்கிறார் பத்மநாதன்.
இப்போது வாரம் ஒரு முறை மருத்துவ சோதனைக்காக அந்தக் குழந்தை மருத்துவனைக்கு அழைத்துவரப்படுகிறாள். அவளை படம் பிடிக்க பத்திரிக்கையாளர்கள் போட்டிபோட்டி வருகின்றனர்.
பத்மநாதன் அவளின் கையை பிடித்தால், தனது தாயிடம் முறையிடுகிறாள், தனது குட்டிக் கண்களைவிரித்துக் கொண்டு. இதற்குக் காரணமும் உள்ளது. கையில் சில நரம்புகள் சரியாகும் வரை அவளதுகையைத் தொட்டாலே யாரே முட்டியில் இடித்தது போன்ற வலியும் உணர்வும் அவளுக்கு ஏற்படும்.
விரல்களை முறையாக இயங்க வைக்கும் 3 முக்கிய நரம்புகளில் ஒன்று சரியாக இயங்கவில்லை.விரைவிலேயே இதுவும் குணமடையும் என நம்புகிறோம். ஆனால், எதையும் உறுதியாகக் கூறமுடியாது என்கிறார் பத்மநாதன்.
உலகிலேயே குழந்தைக்கு மற்றொரு குழந்தையின் கையை பொறுத்திய முதல் அறுவை சிகிச்சை இதுதான். இந்த வாரம் பத்மநாதன் சிங்கப்பூர் வருகிறார். 22வது சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர்கள்மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர் குழந்தைக்கு கையை பொறுத்தியதை விளக்குவார்.
இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட கை, கால் பொறுத்தும் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்பத்மநாதன்.
அந்தக் குட்டிக் குழந்தையின் குட்டிக் கரம் நன்றாக செயல்பட வாழ்த்துவோம்.