அக்டோபர் 30-ம் தேதி முதல் கல்கத்தா-லண்டன் இடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானச் சேவை
டெல்லி:
கல்கத்தாவுக்கும், லண்டனுக்கும் இடையே அக்டோபர் 30-ம் தேதி முதல் நேரடிவிமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்அறிவித்துள்ளது.
வாரத்துக்கு மூன்று முறை இந்த நேரடி போயிங் 777 விமானப் போக்குவரத்துமேற்கொள்ளப்படும்.
கல்கத்தாவிலிருந்து திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைளிலும், லண்டனில் இருந்துபுதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமானம் இயக்கப்படும்.
கல்கத்தாவில் காலை 7.45 மணிக்குப் புறப்படும் விமானம் பிற்பகல் 1.15-க்கு லண்டன்சென்றடையும். அதேபோல் லண்டனில் காலை 9.50-க்குப் புறப்பட்டு பிற்பகல் 1.05கல்கத்தா வந்தடையும்.
இதையடுத்து இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகியநான்கு முக்கிய நகரங்களுக்கு வாரத்துக்கு 19 விமானங்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ்நிறுவனம் இயக்குகிறது. லண்டன் தவிர, ஐரோப்பிய நாடுகளுக்கும்,அமெரிக்காவுக்கும் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.
டெல்லி, மும்பை நகரங்களுக்கு தினமும் ம், சென்னைக்கு வாரம் இரு முறையும்விமானங்கள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 30-ம் தேதி முதல் கல்கத்தாவுக்குவாரம் 3 முறை விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications