For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்ச் பிக்ஸிங்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தாமதமாகும் - சிபிஐ

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம்சமர்ப்பிக்க மேலும் சில காலம் ஆகும் என்று சிபிஐ அதிகாரிகள்தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது மேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.

இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பைக் கிரிக்கெட்டின்போது தனக்குரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக கபில்தேவ் மீது மனோஜ்பிரபாகர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பும், சர்ச்சையும்ஏற்பட்டன. இந் நிலையில், மேட்ச் பிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டைவிசாரிக்கும்படி சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் கடந்த 6 மாதமாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பலமுன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரிய முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணைநடத்தப்பட்டது.

இம் மாத இறுதியில் தனது விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம்சிபிஐ தாக்கல் செய்யும் என்று கூறப்பட்டது. சிபிஐ விசாரணைஅறிக்கையில் கபில் தேவ் மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும்இல்லை என்றும் ஆனால், மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக 4 கிரிக்கெட்வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால், விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யமேலும் கால அவகாசம் பிடிக்கும் என்று சிபிஐ அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

விசாரணை அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதையும், யார்அந்த 4 வீரர்கள் என்பதையும் சொல்லமுடியாது என்று அவர்கள்கூறிவிட்டனர்.

எங்களுடைய வேலை மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கள் குறித்துவிசாரணை நடத்தவேண்டியதுதான். விசாரணையை முடித்து மத்தியஅரசிடம் அறிக்கையை தாக்கல் செய்துவிடுவோம்.

அதன்பிறகு மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்களின் பெயர்களைவெளியிடுவதோ, வெளியிடாமல் இருப்பதோ மத்திய அரசின் விருப்பம்என்று அவர்கள் கூறிவிட்டனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X