For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்ரேல், பாலஸ்தீன பேச்சு: கெய்ரோ சென்றார் கிளிண்டன்

By Staff
Google Oneindia Tamil News

கெய்ரோ:

எகிப்திலுள்ள ஷாம் அல் ஷேக் என்ற இடத்தில் இஸ்ரேல் பிரதமர் எஹத் பாரக்,பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் ஆகியோருக்கு இடையே திங்களிழமை அமைதிப்பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் கிளிண்டனும் கலந்துகொள்கிறார்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே நடந்து வரும் வன்முறையில் இதுவரை 100 பேர்இறந்துள்ளனர். வன்முறையைத் தணிக்கவும், மேற்கு ஆசிய அமைதிப்பேச்சுவார்த்தையை தொடரவும் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா முயற்சிமேற்கொண்டுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் கிளிண்டன்,எகிப்து தலைநகர் கெய்ரோ வந்து சேர்ந்தார். சில நாட்களுக்கு முன் மேற்கு ஆசியவிவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் கூறுகையில், பாலஸ்தீனர்களும்,இஸ்ரேலியர்களும் வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டும் எனக் கூறியிருந்தார்.

அதன்படி அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட இரு நாட்டு தலைவர்களும்சம்மதித்தனர். பேச்சுவார்த்தை திங்கள்கிழமை எகிப்திலுள்ள ஷாம் அல் ஷேக் நகரில்துவங்குகிறது.

இஸ்ரேல் பிரதமர் எஹூத் பாரக், பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் ஆகியோருக்குஇடையே நடக்கவுள்ள இப்பேச்சுவார்த்தையில், எகிப்து அதிபர் முபாரக், ஜோர்டான்மன்னர் அப்துல்லா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் கிளிண்டனும்பங்கேற்கிறார்.

செப்டம் 28-ம் தேதி வரை நடைபெற்ற வன்முறையில் இதுவரை 100 பேர்கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று புதிதாக எந்த வன்முறையும்நடைபெறவில்லை.

பேச்சுவார்த்தை குறித்து எகிப்து அரண்மனை அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்தகூட்டம் நான்கு மனிநேரம் நடக்க உள்ளது. பேச்சுவார்த்தை (இந்திய நேரப்படி) மாலை3.30 மணிக்கு கோல்ப் ரிசார்ட் ஓட்டலில் துவங்க உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டம் வெற்றிகரமாக முடியும் என உத்திரவாதம் அளிக்க முடியாது என எகிப்துவெளியுறவுத்துறை அமைச்சர் மெளசா ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்தார்.

முன்னதாக, சனிக்கிழமை பேச்சுவார்த்தை குறித்து கிளிண்டன் கூறுகையில், கூட்டத்தின்முக்கிய நோக்கம் வன்முறையை நிறுத்துவதும், மேற்கு ஆசியாவில் அமைதியைஏற்படுத்துவதும், இந்த வன்முறை எதனால் துவங்கியது என்பதற்கான உண்மையைகண்டறிவதும், இதற்கு பேச்சு வார்த்தை மூலம் எவ்வாறு முடிவு காண்பதுஎன்பதும்தான் என்றார்.

விசாரணை கோருகின்றனர் பாலஸ்தீனர்கள்:

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக சர்வதேசஅளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாலஸ்தீனம் கோரிக்கைவிடுத்துள்ளது.

பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பாலஸ்தீன பிரதிநிதிகளில் ஒருவரான சகேப் இரிகாட்கூறுகையில், வன்முறை தொடர்பாக சர்வதேச நாடுகளின் விசாரணையை அராபத்கோருவார். தொடரும் வன்முறை காரணமாக அக்டோபர் 4-ம் தேதி அமெரிக்கவெளியுறவுத்துறை செயலாளர் மெடாலின் அல்பிரைட் தலைமையில் அராபத் - பாராக்இடையே நடைபெற இருந்த பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதுஎன்றார்.

இதற்கிடையே, டி.விக்கு அளித்த பேட்டியில், அல்பிரைட் கூறுகையில், இந்தபேச்சுவார்த்தை வெற்றி பெறும் என நம்புகிறோம். பேச்சுவார்த்தையின் முக்கியநோக்கம், வன்முறையை நிறுத்தி பழையபடி அமைதியைக் கொண்டு வருவதுதான்எனக் கூறியுள்ளார்.

போராக மாறும் .. எச்சரிக்கிறது ரஷ்யா

தற்போது பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் வன்முறையில்100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது அரபு - இஸ்ரேலுக்கிடையே பெரும் போராகமாறும் அபாயம் உள்ளது என ரஷ்யா அச்சம் தெரிவித்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X