ராஜ்குமார் வந்தவுடன் அதிரடிப்படை "ஆக்ஷன்
சென்னை:
நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்ட அடுத்த நிமிடமே காட்டுக்குள்புகுந்து தேடுதல் வேட்டையை தொடங்க தமிழக - கர்நாடக அதிரடிப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காட்டுக்குள் சென்றுள்ள புதிய தூதுக்குழு வீரப்பனுடன் நடத்தி வரும்பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அநேகமாக ராஜ்குமாரும், மற்றவர்களும் திங்கள் இரவு விடுவிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அவர்கள் காட்டை விட்டு வெளியே வந்ததும் அவர்களை பாதுகாப்புடன்அழைத்து வருவதற்கும் போலீஸ் படை தயார் நிலையில் சத்தியமங்கலம்,தலைமலை காட்டுப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் இவ்வளவு நாட்களாக இரு மாநில அரசுகளையும் கலங்கடித்தசந்தன வீரப்பனையும், அவனது தமிழ்த் தீவிரவாதி கூட்டாளிகளையும்பிடிக்கவும் அதிரடிப்படை தயாராக உள்ளது.
ராஜ்குமாருடன் தூதுக்குழுவினர் காட்டை விட்டு வெளியேறி விட்டனர்என்பதை உறுதி செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அதிரடிப்படை தனது"ஆக்ஷனை தொடங்கி விடும் எனத் தெரிகிறது.
இதற்காக பல்வேறு காம்ப்களில் இருந்த அதிரடிப்படையினர் அவசரஅவசரமாக வரவழைக்கப்பட்டு போலீஸ் அதிகாரி பாலச்சந்திரன்தலைமையில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.