ராஜ்குமார் எந்த நேரத்திலும் விடுவிக்கப்படலாம் - கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் எந்த நேரத்திலும் விடுவிக்கப்படலாம் என்றுதமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களிடம் அவர்திங்கள்கிழமை மாலை கூறியதாவது:
ராஜ்குமாரை கடத்தி வைத்துள்ள சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் நக்கீரன்கோபால், தமிழ் தேசியவாத இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதால், திங்கள்கிழமை இரவோ அல்லதுசெவ்வாய்க்கிழமை காலையோ எந்த நேரத்திலும் ராஜ்குமாரை வீரப்பன்விடுவிக்கலாம்.
விடுவிக்கப்படும் ராஜ்குமார் சென்னைக்கு அழைத்து வரப்படுவாராஅல்லது பெங்களூர் கொண்டு செல்லப்படுவாரா என்று எனக்குத்தெரியாது என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications