சீதாராம் கேசரிக்கு நினைவு திரும்பியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரிக்கு நினைவு திரும்பியது.அவர் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன் திடீரென்று சீதாராம் கேசரிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.உடனடியாக அவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாச கருவிகள்பொருத்தப்பட்டு அதன் மூலம் அவர் சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கிடையே, திடீரென்று அவர் சுயநினைவை இழந்தார்.

இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை முறையை மேற்கொண்டனர்.அச் சிகிச்சையின் பலனாக திங்கள்கிழமை அவருக்கு மீண்டும் நினைவு திரும்பியது.
இப்போது அவர் எந்தவித செயற்கு சுவாசக் கருவியும் இல்லாமல் சுவாசிக்கிறார்.அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று அவரது வீட்டு பணியாள்தெரிவித்தார்.

அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டாலும் இன்னும் சில நாட்களுக்கு அவர் தொடர்ந்துதீவிர சிகிச்சைப் பிரிவில் தான் இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சீதாராம் கேசரிக்கு இருந்த நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஆகிய பிரச்சினைகள்தீர்க்கப்பட்டுவிட்டன. இப்போது அவரது இடுப்பு எலும்பு வலிக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+