கோர்ட்டில் ஆஜராகாத நாகப்பாவுக்கு மீண்டும் நோட்டீஸ்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிடியிலிருந்து தப்பி வந்த உதவி டைரக்டர் நாகப்பாதிங்கள்கிழமை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
சந்தனக் கடத்தல் வீரப்பன் ஜூலை மாதம் 30-ம் தேதி பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார்உட்பட நான்கு பேரை கடத்திச் சென்றான். பல நாட்களுக்குப் பின் உதவி இயக்குனர்நாகப்பா வீரப்பனிடமிருந்து தப்பி வந்ததாகச் சொன்னார்
ஆனால் அவர் நிருபர்கள் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துவந்தார். அதனால் மக்களிடையே பெரும் குழப்பம் வந்தது. இதைத் தொடர்ந்துஹொட்டேபக்ஷா (வயிற்றுக் கட்சி) தலைவர் ரங்கசாமி உயர் நீதிமன்றத்தில்நாகப்பாவை ஆஜர்படுத்தி உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என மனுசெய்தார்
மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி அசோக் பான் மற்றும் நீதிபதி குருராஜன்இருவரும் நாகப்பா போலீஸ் காவலில் இருந்தால் நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்றுஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். அதற்கு போலீஸ் டிஜிபி தினகர் தாக்கல்செய்த பதில் மனுவில், நாகப்பா சுதந்திரமாக இருக்கிறார் என கூறினார்.
நாகப்பாவை திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி அவர் வீட்டு வாசலிலும்நோட்டீஸ் ஒட்டப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
நீதிபதிகள் அவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன் மனுதாரர்நாகப்பாவிடம் நேரிலும் நோட்டீஸ் கொடுக்குமாறும் கூறியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications