ஜெயலலிதா,சசிகலா மீது மேலும் ஒரு புதிய வழக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாமீதும், அவரது தோழிசசிகலாமீதும் புதிய வழக்கு தொடரப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் சொந்தமாக நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைரநகைகள் உள்ளன. இவைகள் தனி நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகஇவர்கள் இருவரும் வருமான வரித்துறையிடம் சொத்து வரிக்கணக்கை தாக்கல் செய்யஇயலவில்லை.

வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா,அவரது தோழி சசிகலா, மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இது குறித்த வழக்கு தனிநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக போயஸ் தோட்டத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி நகைகள்கைப்பற்றப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில், சென்னை ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா கடைசியாக தனது சொத்துக் கணக்கை 92- 93-ம் ஆண்டு சமர்பித்தார். அதன் பிறகுசொத்து கணக்கை தாக்கல் செய்யவில்லை.

93-94-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சொத்து வரிக்கணக்கை சமர்பிக்கும் படிபல முறை கேட்டுக் கொண்டபோதும் அவர் சமர்பிக்கவில்லை.

இதனால் எக்ஸ்பார்ட்டி என்று கருதி ஜெயலலிதா, சசிகலாவுக்கு மூன்று கோடி ரூபாய் சொத்துஇருக்கும் என கணக்கிடப்பட்டு, அதற்காக 4 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் சொத்து வரிவிதிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகையும் கட்டப்படவில்லை.

93-94-ம் ஆண்டைத்தவிர ஜெயலலிதா.சசிகலாவுக்கு சொந்தமான நான்கு கோடி ரூபாய் நகைகளைமதிப்பீடு செய்ய இயலாத காரணத்தால்தான் மற்ற ஆண்டுகளுக்கான சொத்துவரி கணக்கை தாக்கல்செய்ய முடிவவில்லை.என கூறப்படுகிறது.

இந்த நகைகளை மதிப்பீடு செய்ய பதிவு பெற்ற நகை மதிப்பீட்டாளர்கள் நியமிக்கக் கோரிஜெயா.சசி இருவரும் கேட்டுக் கொண்டதன் பேரில் உம்மிடி நந்த கோபால் என்ற பதிவுபெற்ற நகைமதிப்பீட்டாளர் நியமிக்கப்பட்டார்.

இவர் மதிப்பீடு செய்யும் முன்னரே இறந்து விட்டார். அதன் பிறகு பல நகை மதிப்பீட்டாளர்களும்நகையை மதிப்பீடு செய்ய மறுத்து விட்டனர்.நீதிமன்றம் இவர்களே நகை மதிப்பீட்டாளர்களைநியமித்துக் கொள்ளலாம் எனக் கூறிய பிறகும் இவர்கள் மவுனம் காத்து வருகின்றனர்.

சொத்துவரிக் கணக்கை தாக்கல் செய்யாததால் முன்னரே ஜெயலலிதா. சசிகலா மீது எழும்பூர்பெருநகர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மற்ற ஆண்டுவருமான கணக்கை காட்டாமல் இருப்பதால் வருமான வரித்துறையினர் புதிய வழக்கை தொடரும்வாய்ப்புகள் இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+