இரவு அல்லது நாளை ராஜ்குமார் திரும்புவார்- நக்கீரன்
சென்னை:
ராஜ்குமார் எப்பொழுது வேண்டுமானாலும் சென்னை வரலாம் என்கிற பரபரப்பு சென்னை மாநகரம் முழுக்க பரவியிருக்கிறது.
ஈரோடு வந்துவிட்டார்கள், காரில் புறப்பட்டுவிட்டார்கள், இல்லை இல்லை காட்டுக்குள் தான் இருக்கிறார்கள் என்று மாற்றிமாற்றி தகவல்கள் வந்து கொண்டுள்ள நிலையில்
நிஜத்தில் நடப்பதுதான் என்ன? என்று நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தில் விசாரித்தோம்.
நேற்று இரவு நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இப்போது வரை ஏதும் வரவில்லை. காட்டிற்குள்பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. பேச்சுவார்த்தை முடிவடைந்து இன்று இரவுக்குள் நல்ல தகவலைஎதிர்பார்க்கிறோம். கூடவே இன்று இரவு அல்லது நாளை கண்டிப்பாக ராஜ்குமாருடன் தூதுவர்கள் திரும்புவார்கள் என்றுஎதிர்பார்க்கிறோம்.
ஆசிரியர் கோபால் பேசினாரா?
இல்லை. ஆசிரியரிடமிருந்தும் தொலைபேசி எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நிறைய வதந்திகள் பரவிக்கொண்டிருக்கிறன.ஆனால் இதுவரை காட்டில் இருந்து தகவல் ஏதும் வரவில்லை. பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. இன்று(திங்கள்கிழமை) இரவுதான் நல்ல தகவலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள் நக்கீரன் அலுவலகத்தில்.












Click it and Unblock the Notifications