ஜாதி ஒழிப்பு பிரசாரம் செய்ய கி.வீரமணி திட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

ஜாதியை ஒழிக்க வேண்டும், நாடாளுமன்றம், சட்டசபையில், பெண்களுக்கு 33 சதவீதஇட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம்முதல் சென்னை வரை 10 நாள் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி முடிவு செய்துள்ளார்.

திருச்சியில் நடந்த தி.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிறகு, செய்தியாளர்களுக்குவீரமணி அளித்த பேட்டி:

மக்களிடையே ஜாதியை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது,பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு செய்வது குறித்து ராமேஸ்வரம் முதல் சென்னைவரை10 நாள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன்.

ஜாதி ஒழிப்பு பிரசாரத்தில் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள்.பிரச்சாரம் நவம்பர் 10-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து துவங்கும். விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம் மற்றும்திருவண்ணாமலை வழியாக நவம்பர் மாதம் 19-ம் தேதி சென்னையில் முடிவடையும்.

பிரச்சாரத்தின் போது மக்களுக்கு மத்திய அரசின் மதவாத நடவடிக்கை பற்றி எடுத்துக்கூறப்படும். மேலும் தாராளமயமாக்குதல், தனியார் மயமாக்குதல், உலகமயமாக்குதல்காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் மண்டல் கமிஷன் அறிக்கையைஉடனடியாக அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவிக்கப்படும்என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+