இந்தியாவுடன் போர் வராது என்கிறார் முஷாரப்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியா - பாகிஸ்தானிடைய போர் மூளும் அபாயம் ஏதும் இல்லை என்றுபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும்சனிக்கிழமை பி.பி.சி. டிவிக்கு அளித்த நீண்ட பேட்டியில் கூறியதாவது:

அண்டை நாடான இந்தியாவுடன் போர் ஏற்படும் வாய்ப்பு ஏதும் இல்லை. நாங்கள்பேச்சு வார்த்தையை துவக்கியிருக்கிறோம் என நம்புகிறேன்.

2003-ம் ஆண்டுக்குள் உலக வங்கியிடமிருந்து வாங்கியுள்ள கடனை அடைத்துபாகிஸ்தானை அதனிடமிருந்து விடுவிப்பேன். அப்போது பாகிஸ்தான்பொருதாளரத்தில் சிறந்து விளங்கும். இனி பாகிஸ்தான் பொருளாதரத்திற்கு யாரையும்சார்ந்திருக்காது.

மாவட்ட அளவிலான தேர்தலை நடத்த முடிவெடுத்துள்ளேன். அதன் மூலம்பிரதிநிதிகளுக்கு அதிகாரம் பகிர்ந்து வழங்கப்பட இருக்கிறது. இதுவே உண்மையானஅடிமட்ட அளவிலான ஜனநாயகம்.

மாவட்ட அளவில் நல்ல அரசியல் தலைவர்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால்பணப் பற்றாக்குறை காரணமாக மக்கள் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகிறது.

பாகிஸ்தானின் தேர்தல் முறை பணக்காரர்கள், பரம்பரையாக ஆட்சி செய்பவர்களாள்கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது இதற்கு முக்கிய காரணம் பூட்டோ குடும்பத்தினரும்,ஷெரீஃப் குடும்பத்தினருமே.

அடிமட்ட ஜனநாயக உரிமை வழங்குவதன் மூலம் இது போன்ற செயலை அடியோடுஒழிக்க முடியும். அடுத்த மாதம் நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைமாவட்ட அளவிலான தேர்தல்களில் பங்கெடுக்கும்படி வற்புறுத்தவுள்ளேன்.

நிச்சயமாக பரம்பரையாக ஆட்சி செய்தவர்களை மீண்டும் ஆட்சி செய்ய அனுமதிக்கமாட்டேன் என அவர் கூறினார்.

2002-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை அமைக்க வேண்டும் எனமுஷாரப்பிற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+