ராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதல்: 3 பேர் பலி
கொழும்பு:
வட இலங்கையில் வவுனியா-மன்னார் சாலையில் ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்நடத்தினர். இதில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.
வீரர்கள் திருப்பித் தாக்கியதில் ஒரு விடுதலைப் புலி கொல்லப்பட்டார். ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர்கருணா ரத்னே கூறுகையில், பெரெயன்குளம் சந்திப்பு அருகே கணேசபுரம் மல்வத்தே கிராமத்தில் உள்ள ராணுவமுகாமின் மீது புதன்கிழமை காலை 6.30 மணிக்கு புலிகள் தாக்குதல் தொடுத்தனர்.
தாக்குதல் நடந்தபோது 5 முதல் 7 வீரர்கள் மட்டுமே முகாமில் இருந்தனர். முகாமைச் சேர்ந்த பல வீரர்கள் ரோந்துப்பணிக்கு வெளியே சென்றுவிட்டன
புலிகள் தாக்கியவுடன் முகாமில் இருந்த ராணுவ அதிகாரி திருப்பித் தாக்கினார். இதில் ஒரு புலி கொல்லப்பட்டார்.மற்ற புலிகள் தப்பிவிட்டனர். சம்பவ இடத்திலிருந்து புலிகள் விட்டுச் சென்ற வீடியோ காமிா பறிமுதல்செய்யப்பட்டது என்றார்.
புலிகளின் தாக்குதலில் இந்த முகாமின் தகவல்-தொடர்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசுகூறியது. இது புலிகள் நடத்திய மிக மோசமான தாக்குதல் என ராணுவம் தெரிவித்தது.
நாடாளுமனறம் கூடுகிறது:
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமனறம் புதன்கிழமை முதல்முதலாக கூட உள்ளநிலையில் புலிகள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
கொழும்பில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த முகாமுக்கு பிற படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன