For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம.தி.மு.க. தேர்தல் கொலை .. 2 பேர்கைது

By Staff
Google Oneindia Tamil News

நாமக்கல்:

நாமக்கல்லில் ம.தி.மு.க.,தேர்தலின்போது ஏற்பட்ட மோதலில் நடந்த கொலைதொடர்பாக போலீசார் 2 பேரைக் கைது செய்தனர். 9 பேர் மீது வழக்குத்தொடர்ந்துள்ளனர்.

நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த அக்டோபர் 16--ம்தேதி ம.தி.மு.க.,மாநகர் செயலருக்கான பதவிக்கு தேர்தல் நடக்கவிருந்தது.

இந்த தேர்தலில் இளம்பரிதி சின்னச்சாமி மற்றும் புகழேந்தி ஆகியோருக்கிடையேகடும் போட்டி நிலவியது. இந்த போட்டி மோதலாகியது. இருதரப்பினரும் கத்தி,அரிவாள், துப்பாக்கி, வெடிகுண்டு என அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்திமோதிக் கொண்டனர்.

இதில் ம.தி.மு.க. பிரமுகர் தென்னரசு (33) அரிவாளால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்த மோதலையடுத்து இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் யாரையும் கைது செய்யஇயலவில்லை. ஆயுதங்களுடன் இருந்த கார் ஒன்றை மட்டுமே கைப்பற்றினர்.

இந்த சம்பவம் நடந்த திருமண மண்டபத்தை நேற்று சேலம் ஐ.ஜி.,ஜெகந்நாதன் சென்றுபார்விையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

நாமக்கல்லில் ம.தி.மு.க.,பிரமுகர் தென்னரசு கொலை சம்பவம் தொடர்பாக இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிசாரணை நடந்து வருகிறது.

மேலும், சம்பவ இடத்திலிருந்து ஒரு அம்பாசிடர் காரும், அதில் வைக்கப்பட்டிருந்தஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றிவழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சம்பவ இடத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியஇன்ஸ்பெக்டர் அசோகன் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தர்மபுரிமாவட்டத்தில் உள்ள அஞ்செட்டிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X