கிருஷ்ணா கூறித்தான் நெடுமாறன் போனார் .. கருணாநிதி
சென்னை:
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக் கொண்டதன் பேரில் தான் தூதராக செல்ல நெடுமாறன் ஒப்புக்கொண்டார் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க காட்டுக்குச் சென்ற தூதர் குழுவில் இந்த முறை தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறனும் இடம் பெற்றிருந்தார். இவர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். இவரை தூதுக் குழுவில்இடம் பெறச் செய்ததற்கு தமிழகத்தில் த.மா.கா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்தன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரெய்ச்சூர் நிகழ்ச்சியில் பேசியபோது இதை கடுமையாக ஆட்சேபித்தார்.நெடுமாறனை அனுப்பியதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் சென்னையில் வியாழக் கிழமை சோனியாவின் புகார் பற்றி தமிழக முதல்வர் கருணாநிதியிடம்நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்:
மக்கள் உரிமைக் குழு கூட்டமைப்பு தலைவராக உள்ள நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, சுகுமாரன்ஆகியோரை தூதுக்குழுவில் அனுப்பி வைக்குமாறு வீரப்பனிடம் இருந்து தகவல் வந்தது. வீரப்பன் அனுப்பியகேஸட்டில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதுபற்றி கர்நாடக முதல்வரின் கருத்தை அறிய விரும்பினேன். உடனே நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜைபெங்களூருக்கு அனுப்பி கர்நாடக முதல்வரை சந்தித்து இதுபற்றி பேசும்படி கூறினேன். அதன்படி காமராஜிடம்கிருஷ்ணா சம்மதம் தெரிவித்தார். அதோடு மட்டுமல்ல, பெங்களூரில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா,நெடுமாறனுடன் தொலைபேசியில் பேசினார். அவரே நெடுமாறனை காட்டுக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.அதன் பிறகு தான் தூதுக் குழுவில் இடம் பெற்று நெடுமாறன் காட்டுக்கு சென்று வந்தார்.
நமக்கு இப்போது ராஜ்குமார் மீட்கப்படுவதுதான் முக்கியம் என்பதால் இதுபற்றி மேலும் விவாதிக்க நான்விரும்பவில்லை என்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications