For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூர் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த எண்ணிக்கை 27 சதவீதம்உயர்ந்துள்ளது.

கோவையில் டிராவல்ஸ் ஏஜென்சிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்தகலந்துரையாடலில் சிங்கப்பூர் சுற்றுலா வாரிய அமைச்சர் ஐஸ்வர்யா குஹார் கலந்துகொண்டார்.

கலந்துரையாடலின்போது சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வசதிகள், பயணிகள் தங்கவசதியான ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் ஆகியவை குறித்து விளக்கினார்.

மேலும், சிங்கப்பூருக்கு இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 2.9 லட்சம் பேர் சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டு கடந்த 9 மாதங்களில் 2.3 லட்சம் பேர் வருகைதந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே சதவீதத்தைக் கொண்டு கணக்கிட்டால், இது 27சதவீதம் உயர்வாகும்.

சிங்கப்பூரில் கேளிக்கை, ஷோ ரூம்கள் போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X