அ.பி. எல்லையில் சீன ஊடுருவல் கவலைக்குரியது.. பெர்னாண்டஸ்
டெல்லி:
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைக்கடந்து சீன வீரர்கள் ஊடுருவியுள்ளதாக அருணாசலப் பிரதேச மாநில முதல்வர்தெரிவித்துள்ள கருத்தை சாதாரணமாக ஒதுக்கிவிடமுடியாது என்று மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் தெரிவித்தார்.
இந்திய-சீன எல்லைப் பகுதியில் உள்ள மாநிலம் அருணாசலப் பிரதேசம். இருநாடுகளுக்கும் இடையே கிழக்குப் பகுதியில் சுமார் 1030 கிலோமீட்டர் பொதுவானஎல்லைப் பகுதி உள்ளது. அது முழுவதும் அருணாசலப் பிரதேசத்தில்தான் உள்ளது.
இந் நிலையில், டிபாங் பள்ளத்தாக்கு மாநிலத்தில் உள்ள கெய்லா பகுதியில் சீனாவில்தயாரிக்கப்பட்ட பீரங்கியையும் தவாங், தாக்சிங் மற்றும் மஜா பகுதிகளில் சீனதுருப்புக்களின் நடமாட்டத்தையும் ராணுவத்தினரும், உளவுப் பிரிவினரும்கண்டுபிடித்துள்ளனர் என்று அருணாசலப் பிரதேச முதல்வர் முகுத் மித்தி அக்டோபர்15-ம் தேதி தெரிவித்தார்.
மித்தியின் இச் செய்தியை சாதாரணமாகக் கருதி ஒதுக்கி விட முடியாது. இருப்பினும்,இது குறித்து நான் இன்னும் மித்தியுடன் பேசவில்லை. மித்தியின் செய்தியில் உண்மைஇருக்கும்பட்சத்தில் அது பற்றி உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும்என்று ஜார்ஜ் பெர்னான்டஸ் தெரிவித்தார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில்கலந்து கொள்ள வந்த நிருபர்களிடம் இதைத் தெரிவித்தார்.
ஒரு மாதத்துக்கு முன் நான் அருணாசலப் பிரதேசத்துக்குச் சென்றேன். அப்போது அம்மாநிலத்துக்குள் எந்த ஊடுருவலும் இல்லை. மித்தியின் செய்தியைப் பார்க்கும்போதுசமீப காலமாகத்தான் ஊடுருவல் இருப்பதாகத் தெரிகிறது என்றார் அவர்.
யு.என்.ஐ.